N E W S

கல்வியியற் கல்லூரிக்கு ஏன் இந்தப் போட்டி நிலவுகிறது? - முக்கிய காரணங்கள்


 
தற்போது அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத் தகுதியுடன், தேசிய கல்வியியற் கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளதனால் கல்வியியற் கல்லூரிக்காக காத்திருக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.


* ஒரு பட்டப்படிப்பை முடித்து வெளியே வர குறைந்தது 4 முதல் 5 வருடங்கள் ஆகலாம். அதன் பின்னரும் போட்டிப் பரீட்சைகள் மூலம் வேலை தேட வேண்டும். ஆனால், கல்வியியற் கல்லூரியில் 3 வருடங்களிலேயே (2 வருடக் கல்வி + 1 வருடப் பயிற்சி) டிப்ளோமா முடிந்து, நான்காவது ஆண்டின் தொடக்கத்தில் நிரந்தர அரச நியமனம் கிடைத்துவிடுகிறது. 


* உயர் Z-Score புள்ளி பெற்ற மாணவர்கள் கல்வியியற் கல்லூரிக்குள் நுழையும்போது​சாதாரண தரவரிசை மாணவர்கள் பாதிப்படைகின்றனர். 

* ஆசிரியர் தொழிலை மட்டுமே இலக்காகக் கொண்டு தங்களை அதற்கென தயார்படுத்திய நடுத்தர Z-Score மாணவர்கள், மிகச் சிறிய புள்ளி வித்தியாசத்தில் வாய்ப்புகளை இழக்கின்றனர்.

* ஒவ்வொரு வருடமும் கல்வியியற் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளிகள் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளுக்கு நிகராக உயர்ந்து கொண்டே செல்கிறது.

இதனால் கல்வியியற் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படுவது என்பது பெரும் போட்டியாகவே உள்ளது.

E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் 📚National Diploma in Teaching [ R ]📚 📚கல்வி தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். ✅ செய்திகள் ✅ பரீட்சை வினாத்தாள்கள் ✅ கடந்த கால வினாத்தாள்கள் ✅ செயலட்டைகள் ✅ பாடக்குறிப்புக்கள் ✅ புத்தகம் & மொடியுள் ✅ அறிக்கைகள் ✅ வர்த்தமானிகள்

Post a Comment

Previous Post Next Post