நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2474/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, விண்ணப்பதாரிகள் தமது பட்டத் தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டிய இறுதித் திகதி 2026 மார்ச் 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்துக்கு நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வர்த்தமானி அறிவித்தலில் தேவையான மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நீட்டிப்பின் மூலம் பரீட்சைக்கு தோற்றவுள்ள அதிகளவான பட்டதாரிகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விபரங்களுக்கு :

